ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பல்கீஸ் உம்மா அவர்கள் காலமானார்.
கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பல்கீஸ் உம்மா அவர்கள் இன்று (02) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ் சென்றவர்களான செய்யது முஹம்மது, மரியம் பீவி ஆகியோரின் அன்பு மகளும், அப்துல் ஜப்பார் அவர்களின் அன்பு மனைவியும், ஹாஜியானி நூர் நயீமா, காலஞ்சென்றகளான அல்ஹாஜ் சஹீது, அப்துல் சமது, ரஸீனா உம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரியும், சனூன் மரைக்கார், றுஸாதா ஆகியோரின் அன்புத் தாயாரும், நூர்ஜஹான், நஜீம் ஆகியோரின் அன்பு மாமியாரும், அல்ஹாஜ் சித்தீக் (Farzana Export) அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (03) அஸர் தொழுகையின் பின் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல் மகன் சனுன் மரைக்கார்.
No comments