புத்தளம் உடப்பில் ஆலயப் பொங்கல் ஆரம்பம்
(க.மகாதேவன்-உடப்பு)
உடப்பு தமிழ் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (28) ஊரிலிலுள்ள ஆலயங்களில் தைப்பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலுள்ள விநாயகர் ஆலயம், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திலுள்ள விநாயகர் ஆலயம் போன்றவற்றில் பொங்கல் மாலை வேளையில் நடைபெற்றது.
இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
No comments