புத்தளம் - உடப்பு ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல்
(க.மகாதேவன்)
இந்து மக்களின் 2025க்கான தைப்பொங்கல் திருநாள் (14) செவ்வாய்க்கிழமை மிகவும் கோலாகளமாக உடப்பு பகுதியில் கொண்டாடப்பட்டது.
அதிகாலை உடப்பிலுள்ள எல்லா ஆயங்களிலும் விஷேட பூஜைகள் இடம்பெற்றன.
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் சூரியபகவானுக்கு பொங்கல் வைத்து தூப தீபம் காட்டி சூரிய பகவான் வரவேற்கப் பட்டார். அதே நேரம் வீடுகளிலும் இந்து மக்கள் பொங்கல் வைத்து சூரியனை வரவேற்று தைப்பொங்கலை கொண்டாடினர்.
No comments