கல்முனை சாஹிறா தேசியக்கல்லூரியின் (2009/2012)ஆண்டு பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்..!
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 2009ம் ஆண்டு க.பொ.சா/த எழுதிய மற்றும் 2012 ம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த(11)நிந்தவூரில் இடம் பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பித்ததுடன் தங்களிற்கு போதித்த மரணமான ஆசிரியர்கள்,நண்பர்களிற்காக இரு நிமிட மௌன பிரார்த்தனை செலுத்தப்பட்டதுடன்,சிறப்பு அதிதிகளாக அம் மாணவர்கள் கற்ற காலத்தில் தரம் ஆறு தொடக்கம் உயர் தரம் வரை பாடசாலையின் பகுதித் தலைவர்களாக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர் எம். ஐ.ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் வரவேற்புரை பழைய மாணவர்கள் சார்பாக எம்.எச்.அப்துல் றஹ்மான் அவர்களால் நடாத்தப்பட்டதுடன்,தரம் எட்டு மற்றும் கலைப்பிரிவின் கடந்த கால பகுதித் தலைவரான அப்துல் ஹமீட்,வணிக பிரிவு பகுதி தலைவர் அபுல் ஹஸன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்),க.பொ.சா/த பகுதித் தலைவர் டி.எம்.றிபாய் ஆகியோரினால் மாணவர்களின் கடந்த கால நினைவுகளும் சம்பவங்களும் மீட்டப்பட்டு சந்தோசமான தருணங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சாஹிறா பாடசாலையின் தற்போதைய அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்கள் அங்கு உரையாற்றுகையில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு என்றும்தமது பாடசாலைக்கு இன்றியமையாதது என்றார். இன் நிகழ்வில் ஐந்தாவது மேலங்கி அறிமுகமும், அதிதிகளிற்கான நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுன் மாணவர்கள் சார்பாக ஏ.எம்.எம்.ஹக்கானி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு(2009/2012)ஆம் ஆண்டு கல்முனை சாஹிராக் கல்லூரியின் (2025)ஆண்டுக்கான பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
No comments