இந்து மக்களின் கார்த்திகை தீபத்திருநாள்
(உடப்பு க.மகாதேவன்) இந்து மக்களின் கார்த்திகை தீபத்திருநாள் நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயம், மற்றும் சர்வாலயத்திலும் (வீடுகளில்) இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்றது. இருவரும் அடி முடி தேடிக் காணமுடியாது சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நாளன்று காட்டியருளினார். இந்த தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்திலும் இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் சொக்கப்பான போன்றவை எரிக்கப்பட்டது.
இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
No comments