புத்தளம் - உடப்பில் ஏகாதசி பூஜை - ஆழிப்பேரலை நினைவு!.
(உடப்பு க.மகாதேவன்)
வரலாற்று சிறப்பு வாய்ந்த உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த மார்கழி மாத(26) ஏகாதசி விரத சுவர்க்கவாயில் தரிசனப் பூஜை நடைபெற்றது.
பூஜையை ஆலய பிரதம குரு பிரம்மஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் இலங்கையில் ஆழிப்பேரலை இடம்பெற்று 20வருடம் நிறைவடைந்த நிலையில் விளக்கு ஏற்றுதல் நிகழ்வோடு, இதில் உயிர் நீத்த உறவுகளுக்கு விஷேட பூஜையும் இடம்பெற்றது.
இதன் போது பக்தர்கள் பலர் இறைவனை வேண்டி வழிபட்டனர்.
No comments