Breaking News

குருநாகல் ஊடகவியலாளர் பஸ்லானுக்கு, மக்களின் மைந்தன் லங்கா புத்திர தேசபந்து கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

வாழும்போதே வாழ்த்துவோம் எனும் தொணிப் பொருளில் தேசிய கலை அரன் ஏற்பாட்டில் பல்துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது தொழிற் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்ன பிரிய மற்றும் இன்திக விஜய் ரத்ன, மாநகர முதல்வர் சுஜிவ மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சுனில் பெரேரா தமிழ் கலைஞர்களின் சங்கத்தின்  தலைவர் இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 


இதன்போது மூன்று கட்டங்களாக பல்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் குருநாகல் ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம்.பஸ்லானுக்கு, மக்களின் மைந்தன் லங்கா புத்திர தேசபந்து கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.


இதன் போது சிரேஷ்ட மற்றும் இளம் கலைஞர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், சிற்ப கலைஞர்கள், ஒப்பனையாளர்கள், ஊடகவியலாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், நல்லிணக்க மத குருமார்கள், தொழில் சார் நிபுணர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள், உடையலங்கார கலைஞர்கள் என பல்துறை சார்ந்த 750 கலைஞர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.





No comments

note