Breaking News

புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இரத்த தான முகாம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் குழுவினரான 2003 க.பொ.த.(சா/த) குழுவினரான "சஹீரியன்ஸ் ட்யூட்ஸ்" அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள இரத்த தான முகாம் சனிக்கிழமை (14) காலை 8.30 இல் இருந்து புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.


"உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும்  தொணிப்பொருளில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாகவும் அண்மையிலே புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.


இதனை கருத்தில் கொண்டே இந்த பழைய மாணவர் சங்கம் இரத்த தான நிகழ்வுதனை உடனடியாக ஏற்பாடு செய்துள்ளது.


பெண்களும் இரத்தம் தானம் செய்வதற்கான விரிவான பிரத்தியேகமான இட அமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


புத்தளம் தள வைத்தியசாலையுடைய இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் மெரீனா தலைமையில் நடைபெறவுள்ள இந்த இரத்த தான நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு ஆர்வத்தோடு இரத்த தானத்தை வழங்குமாறு பழைய மாணவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.




No comments

note