Breaking News

புத்தளம் நகரின் இளம் ஊடகவியலாளர் எம்.எச்.முஹம்மத் முதுமாணிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் நகரின் சமூக சேவையாளரும், இளம் ஊடகவியலாளருமான எம்.எச். முஹம்மத் பேராதனை பல்கலைக்கழத்தில் Master of Arts in International Relations "சர்வதேச உறவுகளுக்கான கற்கை நெறியில்" முதுமானி MA பட்டமேற்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.


Master of Arts in International Relations சர்வதேச உறவுகளுக்கான முதுமானி MA பட்டமேற்படிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் சுமார் மூன்று வருடங்கள் கடந்து நிறைவு செய்துள்ளார்.


தனக்கு உதவியாக இருந்த அனைத்து நல் உள்ளங்கள், குறிப்பாக தனது பல்கலைக்கழக ஆசான்கள், என்றும் வாழ்வில் மறக்க முடியாத தம் பெற்றோர்களான மர்ஹூம்களான எம்.டீ.எம்.ஹபீல், ஆசிரியை ஏ.என்.நஸ்ரின் மற்றும் நண்பர்கள், உறவுகள், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் இவர் இதய பூர்வமாக தெரிவித்துள்ளார்.


பேராதனை பல்கலைக்கழகத்தின் 85 வது பட்டமளிப்பு விழாவில் வெற்றிகரமாக பங்கேற்க கற்கை நெறியின் இறுதி அம்சமான ஆய்வுகளை செம்மைப்படுத்திய ஆசான்களுக்கும் இவர் விஷேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.






No comments

note