Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் அபுல் ஹஸன் மௌலவி (ஹனீபா) அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அபுல் ஹஸன் (ஹனீபா) கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் (ஓய்வு நிலை) அவர்கள் இன்று (19) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான இப்றாஹீம், செய்னத் உம்மா ஆகியோரின் அன்பு மகனும், முஹம்மது ஷரீப்  மற்றும் ஸப்ரா பீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பேஹம் றஹ்மத்தும்மா அவர்களின் அன்புக் கணவரும், ஸைபுநிஸா, ஹஸானா, ஹம்ஸாத், சிபானா, றஸாத். ஹஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும், அப்துல் கபூர் (மௌலவி), முஸம்மில், தௌபீக், நபீல், இர்பானா, றிஹானா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (19) இஷாத் தொழுகையின் பின்னர் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





No comments

note