Breaking News

கற்பிட்டி அல்மனார் கடற்கரையின் காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்தவரும் கற்பிட்டி அல் மன்னாரில் வசித்து வந்தவருமான மொஹமட் றஸ்ஸாக் மொஹமட் பசால் என்ற 33 வயதையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில்  சடலம் கண்டுபிடிப்பு


இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது செவ்வாய் (20) இரவு தான் தற்கொலை செய்யப் போவதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றதாகவும் தாயும் சகோதரரும் இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க வில்லை எனவும் புதன் (21) காலையிலேயே சகோதரர் கற்பிட்டி அல் மன்னார் கடற்கரையின் பின்னால் உள்ள காட்டு பகுதியில் தேடுதல் மேற்கொண்ட வேலை தனது சகோதரர் மரம் ஒன்றில் தூக்கில் தொடங்கியதை கண்டதாக சகோதரர் தெரிவித்தார் .


சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸ் குழு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொணடதுடன் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு அறிவித்ததை அடுத்து களத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டியின் திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசிம்  சடலத்தை பொறுப்பேற்று புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசானணைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note