Breaking News

நடை பயணம் செய்யும் யாழ் இளைஞர்களை வரவேற்று கௌரவம் கொடுத்த புத்தளம் ஜம்மியத்துல் உலமா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்) 

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் நடந்து செல்ல வேண்டும் என்ற பயணத்தை ஆரம்பித்து புத்தளம்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு வருகை தந்தார்கள் நான்கு தமிழ் இளைஞர்களையும் புத்தளம் சமூகம் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை கௌரவமாக வரவேற்றது.


இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதம் சுமந்த மனிதர்கள் என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டும் என்ற செய்தியை இலங்கை முழுதும் கொண்டு செல்லும் இந்த நான்கு தமிழ் இளைஞர்களான வை. மதுஷன் , கே. கபிலேஸ், எஸ். பவிஸ்டன், என். தக்ஸாந்த் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வரவேற்று மரம் நாட்டுவதற்காக இடம் ஏற்பாடு செய்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களால் பதக்கம் அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


இதே போல் நடை பயணம் மேற்கொண்டு பேருவளை யைப் சேர்ந்த ஸஹ்மி ஸஹீட்  அன்மையில் புத்தளம் வந்த போது அவருக்கு பதக்கம் அணிவித்து தமது வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.












No comments

note