Breaking News

புத்தளம் - புழுதிவயல், பனையடிச்சோலை மற்றும் நாயகர்சேனை ஆகிய கிராமங்களில் மின்சாரத்தடை மக்கள் விசனம் .

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

மின்சாரசபையின் கவனத்திற்கு!...

புத்தளம் - புழுதிவயல், பனையடிச்சோலை மற்றும் நாயக்கர்ச்சேனை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

புத்தளம் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரம்பை பனைடிச்சோலையிலேயே ஆகஸ்ட் 17 ஆம் திகதி காலை முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை வரை மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.






No comments

note