Breaking News

சிலாபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் இன்று (15)  சிலாபம் பா.இன் கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சின்ந்தக மாயாதுன்ன  அமைச்சின் செயலாளர் விமலவீர மற்றும் அமைச்சின் ஊடக செயலாளர் நல்லப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில்  சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்று நாடு திரும்பியவர்களின் ஒளிப்பதிவு வீடியோ பதிவு செய்து வெளி நாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சமர்ப்பித்த ஆறு ஊடகவியலாளர்களுக்கு காசோலலைகள் வழங்கப்பட்டது.


மேற்படி ஊடக ஒன்றுகூடலில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மும்மொழிகளையும் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 30 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது










No comments

note