Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மன்னார் - தாராபுறத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், காஸிம் சிட்டியில் வசித்து வந்தவருமான,அல்ஹாஜ் ஜவ்ஹர் ஸாஹிப் அவர்கள் காலமானார்.

மன்னார் - தாராபுறத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ரத்மல்யாய காஸிம் சிட்டியில் வசித்து வந்தவருமான, அல்ஹாஜ் ஜவ்ஹர் ஸாஹிப் அவர்கள் இன்று (03) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார், காலம் சென்றவர்களான  செய்யது காஸிம், நாகூர் உம்மா ஆகியோரின் அன்பு மகனும், ஹாஜியானி சமீரா அவர்களின் அன்புக் கணவரும், காலம்சென்றவர்களான சனூன், சாஜித் மற்றும் ரிசானா ஆகியோரின் சகோதரரும்,


மௌலவி அபூபக்கர், மௌலவி அப்துள்ளாஹ், மௌலவியா சுமையா, மௌலவியா அஸ்மா ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்ஹாஜ் அப்துல் அஸீஸ், ரிசானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ்! இன்று (03) அஸர் தொழுகையுடன், அல்காஸிம் சிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


-தகவல்:

மகன் - மௌலவி அபூபக்கர்.





-

No comments

note