Breaking News

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது நிஸ்பானுக்கு மருத்துவ நிதி உதவிக் கோரல்

புத்தளம் - மதுரங்குளி - நல்லாந்தழுவையில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மத் தாப்தீன் முஹம்மத்  நிஸ்பான் (வயது - 31) அவர்கள் இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.  இவரை பரிசீலித்த வைத்தியர்கள் இவருடைய  இரு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சை செய்து மாற்றீடு  செய்வதற்கான ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்காக சுமார்  ஐம்பது இலட்சம் (50 இலட்சம்) பணம் தேவைப்படும் என வைத்தியர்களால் வைத்திய அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இவரது  குடும்பத்தினரால் இப்பிரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது.


எனவே  உங்களால் முடியுமான பண உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.


அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரனையும்  நாம் பயப்படக் கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக!.


நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)


மேலதிக விபரங்களுக்கு

0785766898  /  0756890571


மனைவியின் வங்கி கணக்கிலக்கம்

M.F. Fathima Faseeha

A/C No - 84529713

Bank of Ceylon

Madurankuli Branch











No comments

note