Breaking News

தூய தேசப் பயணத்தில் இணைந்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காரர் அவர்களுக்கும் இடையில் சந்திப்பு


16 ஜூன் 2024 அன்று முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா அவரது இல்லத்தில் தூய தேசத்தின் கட்சிக்கான தலைவருடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம் பெற்றது.


 இச்சந்திப்பில் தூய தேசத்திற்கான இயக்கம் சம்பந்தமான தெளிவான நகர்வுகள், எதிர்காலத் திட்டங்கள், நோக்கங்கள், இலக்கு என பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு  அவருடைய முழுமையான பங்களிப்பை எங்களுக்கு  தருவதாகவும் உறுதி அளித்தார்.


எதிர்காலத்தில் எங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு  பங்காற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. 


அவருடைய முடிவுகள் சரியான முடிவுகளாக எடுக்கப்பட வேண்டும். சமூகத்திற்காக நல்ல முடிவுகளை எடுத்து இதன் பிறகாவது எமது மண்ணுக்குத் தேவையான அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு முன் நின்று சேவை செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.




No comments

note