Breaking News

பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ தேவாலயம் சேதம்...!

ரஸீன் ரஸ்மின்

மாரவில - தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.


நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மரம் சரிந்து தேவாலயம் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால் அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி கட்டிடம் மற்றும் கூரை என்பனவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


எனினும் சம்பவம் இடம்பெற்ற போது, அந்த தேவாலயத்திற்குள் எவரும் இருக்கவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும்,  தேவாலயத்தின் மீது வீழ்ந்த மரத்தின் கிளைகளையும், சேதமடைந்த கட்டிடங்களையும் அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றனர்.






No comments

note