Breaking News

மதுரங்குளி MPS ஹஜ் ட்ரவல்ஸ் ஊடாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

2024 ஆம் ஆண்டில் MPS ஹஜ் ட்ரவல்ஸின் ஊடாக புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (18) மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டரில் இடம்பெற்றது.


MPS ஹஜ் ட்ரவல்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் MPS ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.டீ. றமீஸ் (காஷிமி) மற்றும்  அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் முஜிபுர் ரஹ்மான் (மனாரி), அஷ்ஷெய்க் முஹம்மத் ஜெமில்கான் (ரஹ்மானி) ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினர்.


இந்நிகழ்வில் MPS ஹஜ் ட்ரவல்ஸ் பிரதிப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.ஏ. அமானுல்லா, Zஸாஹியா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் சௌபான், வவுனியா முன்னாள் பிரதேச செயலாளர் மொஹமட் முஹ்ஸீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இம்முறை MPS ஹஜ் ட்ரவல்ஸ் ஊடாக 132 ஹஜ்ஜாஜிகள் புனித ஹஜ் பயணம்  மேற்கொள்ளவுள்ளனர்.


இதேவளை கிழக்கு மாகாணத்திலிருந்து MPS ஹஜ் ட்ரவல்ஸ் ஊடாக ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான வழிகாட்டல்  கருத்தரங்கு நேற்று காத்தான்குடியிலும், சம்மாந்துறையிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



























No comments

note