Breaking News

கற்பிட்டியில் கலை இலக்கிய வட்டம் பற்றிய கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டியில் கலை இலக்கிய வட்டம் உருவாக்குவதற்கான கலந்துரையாடல் ஒன்று  இன்று(25) இரவு கற்பிட்டியில் தில்லையூர் பாடசாலையின் அதிபர் அருஸ்  தலைமையில் கப்பலடி பாடசாலையின் அதிபர் நவுபின் இல்லத்தில் இடம்பெற்றது.


கற்பிட்டியில்  வலுவிழந்து போய் இருக்கும் கலை இலக்கியத்தை  சக்திமிக்கதாக்குவதுடன் அதனுடன் தொடர்புபட்ட பலர் கற்பிட்டி பிரதேசத்தில் இலைமறை காய்களாக உள்ளனர் அவர்களை இணங் கண்டு ஆற்றல்களை எவ்வாறு வெளிக்கொண்டு வரலாம் என்பது பற்றியும் கலை இலக்கியத்தின் ஊடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப் பட்டதுடன் வாராந்த ஒன்று கூடலுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









No comments

note