Breaking News

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், பல்கலைக்கழக கல்வியல் பட்டதாரிகளை சந்தித்தார்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச் எம் சியாஜ்)

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் வடமேல் மாகாணத்தில் நேற்று (22.05.2024) கல்விப் பட்டதாரிகள் குழுவுடன் கலந்துரையாடினார்.


கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் கல்வியில் பட்டம் பெற்ற வடமேற்கு மாகாணத்தில் வசிக்கும் சுமார் 24 பேர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


இவர்களது குறைகளை கேட்டறிந்த வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், வடமேல் மாகாணத்தில் பட்டதாரி நியமனம் அல்லது பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் போது தாங்களையும் சேர்த்து அந்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வலியுறுத்தினார்.


பட்டதாரிகள் ஆளுநருக்கு இதன்போது நன்றி தெரிவித்தனர். மிக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத தமது பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை ஆளுனர் நசீர் அஹமட் பெற்றுக்கொடுத்துள்ளார்.






No comments

note