Breaking News

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும்,  ஆண்டாங்கனி தாயுப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட நூர்ஜஹான் இன்று (28) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்    காலம் சென்ற அசனாபிள்ளை சித்திமா ஆகியோரின் அன்பு மகளும், அன்ஹார் அவர்களின் அன்பு மனைவியும், நிப்ராஸ், நிப்லா, நப்லான் ஆகியோரின் அன்புத் தாயும், இஸ்ஸதீன், சித்தி பரீனா, சியாப்தீன், வஹாப் (மல்லம்பிட்டி), பைரூஸ், ஸாஹிரா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா அவரது சகோதரர் வஹாப் அவர்களின் மல்லம்பிட்டி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28) அஸர் தொழுகையுடன் மல்லம்பிட்டி பள்ளியில் ஜனாஸா தொழுகை இடம்பெற்று கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


தகவல்

கணவர் அன்ஹார்




No comments

note