Breaking News

புத்தளம் உப்பு உற்பத்தியாளருக்கு சொந்தமான காணி அபகரிப்புக்கு பா.உ அலி சப்ரி றஹீம் எதிர்ப்பு - பிரதேச செயலாளருடன் வாக்கு வாதம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான காணிகளை கபலிகரம் செய்யும் புரோக்கர்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம்.


புத்தளம் மன்னார் வீதி காணிகள் சம்பந்தமாக எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு அலிசப்ரி ரஹீம் அவர்கள் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் மற்றும் அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 


அவற்றை சீரணித்துக்கொள்ள முடியாத சில சமூகவிரோத சக்திகள் கடந்த பல தினங்களாக கிழகரை காணிகள் அமைந்திருக்கும் இடங்களில் குழப்ப நிலையை உருவாக்குவதற்கு தொடரான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


காணி உரிமையாளர்களை மிரட்டுதல், ஊழியர்களை காணிகளிலிருந்து விரட்டியடித்தல் போன்ற பல்வேறு அராஜகங்கள் இடம்பெற்றுள்ளன. நமது கிழகரை அங்கத்தவர்கள் தமது காணிகளை அடைந்து கொள்ளப் போவதன் ஒரு முன்னோடி சமிக்ஞையாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது 


 காணி புரோக்கர்களுடன் பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு வருகை தந்தமை தவறு என்று குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் இது தொடர்பாக குறித்த குழுக்களுடன் இணைந்து அரச மட்டத்தில் இதனை நன்கு ஆராய்ந்து உரியவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் இவ்விடத்தில் வலியுறுத்தி கூறினார்.





No comments

note