பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று (22) பாடாசாலையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் என்.எம்.எம். சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக CITY EXPOT உரிமையாளர் எம்.எம்.எம். றிஸ்வான், விஷேட அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்,ஏ.ஆர்.எம். ரபாத் அமீன், பபாடசாலை பழைய மாணவரும், பொருளியலாளருமான எஸ்.என்.எம். எஸ். நுஸ்லான் மௌலானனா, பாடாசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.எம். மலிக், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.முபாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்தார்.
இதன் போது தரம் இரண்டு மாணவர்களால் தரம் ஒன்று புதிய மாணவர்களை பதக்கம் அணிவித்து பாடசாலைக்கு வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments