Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் ஓய்வு பெற்ற சரூக் தய்யான் ஆசிரியர் அவர்கள் காலமானார்.

புத்தளம், புதுப்பள்ளி மஹல்லா, நுஃமான் ஹோலுக்கு முன்னால் செல்லும் காசிம் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், பகாபள்ளி நிர்வாக சபை ஆலோசகரும், ஓய்வுபெற்ற கணிதப்பாட ஆசிரியரும், தினமும் காலையில் வைத்தியசாலைக்குச் சென்று நோயாளிகளை சுகநலன் விசாரித்து வருபவரும், அதிகமாக பகாபள்ளிவாசலில், இகாமத் சொல்வது, சில சந்தர்ப்பங்களில் இமாமத் செய்பவருமான சரூக் Dதய்யான் ஆசிரியர் அவர்கள் இன்று (27)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி  ராஜிவூன்


அன்னார், ஓய்வுபெற்ற விவசாயப்பாட ஆசிரியை சித்தி நஸீரா  அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான பஜூனாஸ் ஜிப்ரி தய்யான், நபீஸத்துல் பௌசியா மற்றும் பாமசி உரிமையாளர் ரமிஸ் தய்யான், மூசின் தய்யான். குர்ரத்துல் ஹனீன், தூபத்துல் நபீரா ஆகியோரின் சகோதரரும், ஷம்ஸ்  நவீத் தய்யான் அவர்களின்  அன்பு தந்தையும். புத்தளம் - பாத்திமா பெண்கள் பாடசாலை, ஆங்கிலப்பாட ஆசிரியை ஹஸ்னி அவர்களின் மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா  இன்ஷா அல்லாஹ் ! இன்று (27) இரவு 10:00 மணிக்குப் புத்தளம், பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இவ்வாசிரியருக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.



நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


-தகவல்:

மகன் - நவீத் தய்யான்




No comments

note