அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி கடமையேற்பு!
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி முன்னிலையில் இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மாநகர ஆணையாளருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
No comments