22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை தெரிவு செய்ய 7,452 பேர் பொதுத் தேர்தலில் போட்டி
(எம்.ஆர்.எம்.வஸீம்)
பாெதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து கொள்வதற்காக 7 ஆயிரத்தி 452 பேர் போட்டியிடுகின்றனர்.
அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக 697 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு 80 நிராகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் 617 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 12 ஆம் திகதி முதல் நேற்று 19 ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதன் பிரகாரம் 22 மாவட்டங்களில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட 339 அரசியல் கட்சிகளும் 358 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 35 அரசில் கட்சிகளினதும் 45 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளில் இருந்து 3 ஆயிரத்தி 652 வேட்பாளர்களும் சுயேட்சை குழுக்களில் இருந்து 3 ஆயிரத்தி 800 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மேலும் இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிக உறுப்பினர்களாக 19 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் அவற்றில் 3 கட்சிகள் நிராகரிக்கப்பட்டு 16 கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 27 சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் 1 நிராகரிக்கப்பட்டு 26 சுயேட்சைக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து 572 பேருமாக மொத்தம் 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களை தெரிவுசெய்து கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 15 அரசியல் கட்சிகள், 18 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன மொத்தமாக 693 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 11 அரசியல் கட்சிகள், 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 10 ஆசனங்களுக்காக 312 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 17 அரசியல் கட்சிகள், 12 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 435 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள், 10 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 184 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 12 அரசியல் கட்சிகள், 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 275 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
காலி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள், 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 312 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள், 7 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 200 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 11 அரசியல் கட்சிகள், 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 190 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 330 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 17 அரசியல் கட்சிகள், 28 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 405 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 16 அரசியல் கட்சிகள், 22 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 304 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 12 அரசியல் கட்சிகள், 10 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள், 19 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 12 அரசியல் கட்சிகள், 10 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 264 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பொலனறுவை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 11 அரசியல் கட்சிகள், 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 152 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 12 அரசியல் கட்சிகள், 12 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 288 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 10 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 171 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 16 அரசியல் கட்சிகள், 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 308 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 12 அரசியல் கட்சிகள், 7 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 228 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
No comments