Breaking News

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், மதத்தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்ளை கௌரவிக்கும் விழா.

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், மதத்தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்ளை கௌரவிக்கும் விழா ஒன்றினை புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 20/02/2020 ஆம் திகதி வியாழக்கிழமையன்று கொழும்பு வீதி நாகவில்லில் அமைந்திருக்கும் "Whaite Receptio Hall" லில் இடம்பெறவுள்ளது.


அன்றைய தினம் புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவையின்  தெரிவுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள  130 சமாதான நீதிவின்கள் மற்றும் சர்வ மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு  "Dr.C.W.W. கண்ணங்கரா-2020"  சமாதான நீதிவான்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ. சந்திரசிறி பண்டார,புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எச்.௭ம்.எஸ். ஹேரத்,புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எம். நிமல் பெரேரா,  புத்தளம் மாவட்ட காதி நீதிபதியும், சட்டத்தரணியுமான ஏ.எம்.எம்.எஸ். அப்துல் காதர், மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் மேலதிக சிரேஷ்ட்ட செயலாளர் ஏ.ஆர்.எம். மலிக் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் தெரிவுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ள சமாதான நீதிவான்களுக்கான அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments

note