Breaking News

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் முந்தல் பிரதேச செயலகம் சார்பில் அஸீம் பாறூக் போட்டி.




எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவிருக்கும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் முந்தல் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடையாமோட்டையைச் சேர்ந்த அஸீம் பாறூக் போட்டியில் களமிறங்கவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இவர் வியாபார முறைமை தொடர்பான பட்டம் பெற்றவரும், சட்டத்துறையில் பட்டமொன்றிக்காக இறுதி  ஆண்டிலும், முதுமாணி கற்கையும்  கற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டதினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றியவரும், பல்வேறு இளைஞர் மாநாடுகளில் பங்குபற்றியவருமாவார்.  நமது எதிர்பார்ப்புக்கமைய திறமையான, ஆளுமைமிக்க இளைஞர்களுக்கு முன்மாதிரியான ஒருவர் போட்டியில் களமிறங்குவதையொட்டி பெருமைகொள்கின்றோம்.

இதுவரை எமக்கு கிடைக்காத இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறை கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இந்த சகோதரரை இளைஞர் பாராளுமன்றத்திற்கு  தெரிவு செய்வோம்.

வாக்களிக்க  18 வயது முதல் 29 வயதுடையவர்கள் வாக்காளர்களாக பின்வரும் லிங்க் ஊடாக பதிவு செய்துக்கொள்ளமுடியும். https://vote.nysc.lk/

No comments

note