Breaking News

மு.கா. சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது - நிஸாம் காரியப்பர்

தேர்தலில் போட்டியிடவுள்ள விதம் சம்மந்தமாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை .
 
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள விதம் சம்மந்தமாக இன்னும் இறுதி
முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதன் பொது செயலாளர் நிசாம் காரியப்பர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாக இருகிறது.

இதுவரையில் முன்னணியுடன் இணைந்துப் போட்டியிடும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்ற போதும், எதிர்காலத்தில் அது சம்மந்தமாக கட்சியின் உயர்பீடம் கூடி முடிவுகளை எடுக்கவுள்ளது.

சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.


No comments

note