Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாளை 2020-02-07.

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாளை 2020-02-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2:30 மணிக்கு வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன் வளம் மற்றும் நில மீன்பிடித் தொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் சிறப்பு அதிதியாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். றியாஸ், எஸ். ஆப்தீன் எஹியா, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஹிஸாம்முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றிஸ்வி, எஸ்.எச்.எம்.றபீக்  ஆகியோருடன்

கௌரவ அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் டப்ளிவ்.பீ.எஸ்.கே. விஜேயசிங்க மற்றும் புத்தளம் தெற்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் ஆர்.பீ. நிமல்சிறி ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

எனவே அன்றைய தினம் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்புவிடுக்கின்றார் வித்தியாலயத்தின் அதிபர்.


No comments

note