Breaking News

நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று 2020/01/16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9:00 மணியலவில் பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபகரும், முன்னாள்  வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ எச்.எம். றியாஸ்,அவர்களும்

அதிதிகளாக  கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.௭ம். பைசல் மரிக்கார், கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஏ.எச்.எம். ஹாரூன்,  சட்டத்தரணி ஏ.எச். நூஹ்மான் ஆகியோர்

மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க  உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஊர்மக்கள் அனைவரும்  கலந்து சிறப்பித்தனர்.

No comments

note