Breaking News

குவைத்தில் இரத்த தான முகாம்

குவைத் வாழ் இலங்கைத் தொழிலாளர்கள் நலன்கள் கருதி ஆரம்பிக்கப்பட்ட குவைத் அவசர உதவிமையம் இறைவன் உதவியால் வீரியமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவி ஒத்தாசைகளை வழங்கிய திருப்தியுடன் தமது இரண்டாவது வருட பூர்த்தியை அடைய இருக்கும் தருணத்தில்

"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில்

நான்காவது முறையாகவும் மாபெரும் இரத்த தான நிகழ்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி குவைத் அவசர உதவிமைய புதிய நிர்வாக தலைவர் சாலிப் அன்வர் தலைமையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பங்குபெறும் நல்லுள்ளங்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளும்,மதிய உணவும் வழங்கப்படுவதுடன் சிறப்பு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றன.

உங்கள் உதிரத்துளிகள் மூலம் ஓர் இன்னுயிரை காப்பாற்றும் உன்னத பணிக்கு உங்களை மானசீகமாய் அழைப்பு விடுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
94088070- 51057498

No comments

note