Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீர்தாங்கி திறந்து வைப்பு.

கடையாமோட்டை முஸ்லிம்  மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக நிலவி வந்த நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக பிரபல தொழிலதிபரும், Farzana Export உரிமையாளருமான அல்ஹாஜ் என்.எம்.சித்தீக் அவர்கள் வாக்குறிதியளித்திருந்தார்.

அதற்கினங்க தனது சொந்த நிதியிலிருந்து சுமார் ஐந்து இலடசம் (500,000/=) பெறுமதியான நீர் தாங்கியை அமைத்து கொடுத்ததோடு அதனை  இன்று 14/01/2020 ஆம் திகதி செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது அவரின் "சேவை நலன் பாராட்டி" கல்லூரி சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

KMCC - Media unit





No comments

note