Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஆரம்பம்.

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் போட்டியாக மரதன் போட்டி நேற்று 2020/01/17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இப்போட்டியில் ஜாயா, அக்பர், அஸீஸ் ஆகிய மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பற்றினர்.

இப்போட்டியினை ஆரம்பித்து வைக்க முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஆப்தீன் எஹியா, ஏ.எச்.எம்.றியாஸ் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களானகே.எம்.எம். பைஸர் மரிக்கார், என்.எம். ஹிஸாம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பங்குபற்றிய இல்லங்களில் முதலாம் இடத்தை ஜாயா  இல்லமும், இரண்டாம் இடத்தை அஸீஸ் இல்லமும், மூன்றாம் இடத்தை ஜாயா  இல்லமும் பெற்றுக் கொண்டது.

KMCC Media Unit.











No comments

note