Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலாபம் தொகுதி அமைப்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி சதீக்குல் அமீன் இன்று (21) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

இவருக்கான நியமணக் கடிதம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் தயாசித திசேராவும் கலந்துகொண்டார்.

சிலாபம் நகர சபையின் பிரதி நகர பிதாவான இவர்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினருமாவார்.

1998ஆம் ஆண்டு முதல் சிலாபம் நகர சபையின் உறுப்பினராக தொடர்ச்சியாக செயற்படும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

note